Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்பாம்பேய் நகரில் கிடைத்த எலும்புக்கூடுகளில் உள்ள மரபணு ரகசியம் பற்றி தெரியுமா?

    பாம்பேய் நகரில் கிடைத்த எலும்புக்கூடுகளில் உள்ள மரபணு ரகசியம் பற்றி தெரியுமா?

    ரோமப் பேரரசு வரலாறு :

    இத்தாலியின் ரோமப் பேரரசு காலத்தில் இருந்த பாம்பேய் நகரைப் பற்றி தெரியுமா? எரிமலை சீற்றத்தால் அழிந்த இந்நகரத்தில் புதைக்கப்பட்ட ஆண், பெண் உடல்களின் எலும்புகளில் இருந்து மரபணு ரகசியங்களை வெளிக்கொண்டு வந்துள்ளனர். அங்கு உயிரிழந்தவர்களின் எலும்புகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட டிஎன்ஏவில் பதிந்திருக்கும் மரபணுக்கள், ‘பாம்பேய் மனித மரபணு’வுக்கான ஓரளவுக்கு முழுமையான வடிவமாக உள்ளது. கடந்த பல்லாண்டுக் காலத்தில் மிகவும் கடினமாகிப் போன சாம்பலில் இருந்த சலடங்களில் இந்த டி.என்.ஏக்கள் பதப்படுத்தப்பட்டுள்ளன.

    ‘தி கிராஃப்ட்மான்’ஸ் ஹவுஸ்’ என்றால் என்ன ?

    இந்த கண்டுப்பிடிப்புகள் சயின்டிபிக் ரிப்போர்ட்ஸ் எனும் அறிவியல் ஆய்விதழில் வெளியாகி உள்ளது. கடந்த 1933ம் ஆண்டு இந்த உடல்கள் கண்டுப்பிடிக்கப்பட்டன. பாம்பேய் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் அவர்களை ‘காஸா டெல் ஃபாப்ப்ரோ’ அல்லது ‘தி கிராஃப்ட்மான்’ஸ் ஹவுஸ்’ என்று அழைக்கின்றனர்.

    கிபி 74 ஆகஸ்ட் 24 ஆம் தேதி, ஆண் பெண் பலர் சாப்பிடும் அறையில் தங்கி இருந்து இருக்கலாம். எரிமலை சீற்றம் ஏற்பட்டபோது, அவர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்திருக்கலாம். வெசுவியஸ் மலையில் எரிமலை வெடித்தபோது, பெரியளவிலான சாம்பல் உருவாகி, 20 நிமிடங்களில் அந்நகர மக்களை ஆபத்துக்கு உள்ளாக்கியிருக்கலாம் என்று ஓர் ஆய்வு கூறுகிறது.

    சலெண்டா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மானுடவியலாளர் டாக்டர் செரீனா விவா கூறுகையில்:

    “அந்நகர மக்கள் உடல் இருக்கும் நிலையைப் பார்க்கும்போது அவர்கள் தப்பி ஓட முயற்சிக்கவில்லை என்று தெரிகிறது. அவர்கள் இயற்கை சீற்றத்தில் இருந்தும் தப்பிக்கவில்லை. ஏன் தப்பிக்க முயலவில்லை என்பதற்கான காரணம் அவர்களது உடல்நிலை சார்ந்ததாக கூட இருக்கலாம்,” இப்போது அதற்கான சில பதில்கள், அவர்களின் எலும்புகள் குறித்த புதிய ஆய்வில் கிடைத்துள்ளன.

    “எலும்புக் கூடுகள் பாதுகாப்பாக இருந்தது தான் இதற்குக் காரணம். அதுதான் நாங்கள் பார்த்த முதல் விஷயம். அதோடு அது நம்பிக்கைக்குரியதாகவும் தோன்றியது. ஆகவே நாங்கள் டிஎன்ஏ-வை பிரித்தெடுக்கும் முயற்சி ஒன்றைச் செய்து பார்க்கலாம் என்று முடிவு செய்தோம்,” என்று இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய கோபன்ஹேகனில் உள்ள ‘லண்ட்பெக் ஜியோஜெனெடிக்ஸ்’ மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் கேப்ரியல் ஸ்கோரானோ விளக்கினார்.

    அற்புதமான பாதுகாப்பு மற்றும் சமீபத்திய ஆய்வக தொழில்நுட்பம் ஆகிய இரண்டும், ஆராய்ச்சியாளர்கள் ‘சிறிய அளவிலான எலும்புத் தூளில்’ இருந்து பெரும் தகவலை திரட்ட உதவியதாக பேராசிரியர் ஸ்கோரானோ விளக்கினார். மேலும் “புதிய மரபணு வரன்முறையிடல் இயந்திரங்களால் ஒரே நேரத்தில் பல முழு மரபணுக்களை ஆய்வு செய்ய முடியும்,” என்றும் அவர் கூறினார்.

    மரபணு ஆய்வில், அந்த மனிதனின் எலும்புக்கூட்டில் காசநோயை உண்டாக்கும் பாக்டீரியாவின் டி.என்.ஏ உள்ளதாகத் தெரியவந்துள்ளது. மேலும் ,அவரது மண்டை ஓட்டின் அடிப்பகுதியில் உள்ள எலும்புத் துண்டில் அவரது முழு மரபணுக் குறியீட்டையும் உருவாக்கப் போதுமான டிஎன்ஏ உள்ளது.

    அவருடைய மரபணுக் குறியீடுகளும் அதிலிருந்த சில குறிப்பிட்ட அடையாளம் காணக்கூடிய மரபணுக்களும், ரோமானிய பேரரசின் காலகட்டத்திலேயே இத்தாலியில் வாழ்ந்த பிற மனிதர்களுடைய மரபணுக் குறியீடுகளோடு ஒத்துள்ளன. அதோடு, சார்டினியா தீவில் உள்ள மரபணுக்களில் பொதுவாகக் காணப்படும் மரபணு குறியீட்டில் சிலவற்றையும் அவர் கொண்டிருந்தார். இது அன்றைய காலகட்டத்தில், இத்தாலிய தீபகற்பம் முழுவதும் அதிகளவில் மரபணுப் பன்மை இருந்திருக்கலாம் என்பதைப் பரிந்துரைக்கிறது.

    பாம்பேயின் உயிரியல் ஆய்வுகளில் இருந்து கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கும் என்று பேராசிரியர் ஸ்கோரானோ கூறினார். மேலும், பண்டைய கால டிஎன்ஏ உட்பட, அந்தக் காலகட்டத்தின் பல்லுயிரியம் பற்றியும் அதிகம் தெரிந்துகொள்ள முடியும் என்கிறார். மேலும், “பாம்பேய் ஒரு ரோமானிய தீவு போன்றது. எங்களிடம் கி.பி-79ஆம் ஆண்டின் ஒரு நாள் எப்படி இருந்தது என்ற ஆதாரம் உள்ளது,” என்று கூறினார்.

    டாக்டர் விவா, “பாம்பேய் நகரில் இருந்த ஒவ்வொரு மனித உடலும் ‘ஒரு பொக்கிஷம்” என்றார். மேலும், “இவர்கள் உலகின் மிகவும் பிரபலமான வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றுக்கான மௌன சாட்சிகள். அவர்களுடன் பணியாற்றுவது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான, பெருமைக்குரிய விஷயம்,” என்று அவர் கூறியுள்ளார்.

    சென்னைக்கு மாற்றலாகிறார் ஆர்யன் கான் வழக்கின் சர்ச்சை அதிகாரி சமீர் வான்கடே..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....