கைப்பேசியை பயன்படுத்திக்கொண்டே வாகனம் ஓட்டியதால் நிகழ்ந்த விபத்துகளில் 1,040 பேர் உயிரிழந்தனர்.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை ‘2021-இல் நிகழ்ந்த சாலை விபத்துகள்’ குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் 2021-ஆம் ஆண்டு மொத்தம் 4.12 லட்சம் சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளன. இந்த விபத்துகளில் 1.53 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 3.84 லட்சம் மேர் படுகாயமடைந்தனர்.
சாலை விபத்து குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
2021-ஆம் ஆண்டு கைப்பேசியை பயன்படுத்திக்கொண்டே வாகனம் ஓட்டியதால், 1,997 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இந்த விபத்துகளில் 1,040 பேர் உயிரிழந்தனர். மேலும், சாலையில் உள்ள போக்குவரத்து விளக்குகளைக் கவனத்தில் கொள்ளாமல் விதியை மீறிச் சென்றதன் காரணமாக 555 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளது. இதில், 222 பேர் உயிரிழந்தனர். சாலைகளில் காணப்படும் பள்ளங்களின் காரணமாக 3,652 சாலை விபத்துகள் நிகழ்ந்தது. அதில் 1,481 பேர் உயிரிழந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்துக்கு இப்படி ஒரு நிலைமையா? – துர்நாற்றத்தில் ஊழியர்கள்..