குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் குற்றால அருவியில் மக்கள் கூட்டம் களைகட்டும். இங்குள்ள பிரதான குற்றால அருவி, புலியருவி, ஐந்தருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் ஆர்ப்பரித்து வரும் தண்ணீரில் குளிக்க பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கமாகும்.
இந்நிலையில், தென்காசி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளும் மழை பெய்து வருகிறது. இதனால், பிரதான அருவியான குற்றால அருவியில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக ஐந்தருவி, பிரதான அருவி உள்ளிட்ட அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து தென்காசி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஒக்கேனக்கலில் 5-வது நாளாக குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை