Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழா- தமிழக முதல்வர் அறிவிப்பு

    ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழா- தமிழக முதல்வர் அறிவிப்பு

    மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக  கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

    இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 2) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    மாமன்னர்‌ ராஜாஜசோழனின்‌ பிறந்த நாள்‌ ஆண்டுதோறும்‌ சதய விழாவாக தஞ்சாவூர்‌ மாவட்டத்தில்‌ பல்வேறு அமைப்புகளால்‌ கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில்‌, மாமன்னர்‌ ராஜராஜசோழனின்‌ பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்‌ என்று பல்வேறு தரப்பிலிருந்து வந்த கோரிக்கைகளை ஏற்று இந்த ஆண்டும்‌, இனிவரும்‌ ஆண்டுகளிலும்‌ மாமன்னர்‌ ராஜாஜசோழனின்‌ பிறந்த நாள்‌ அரசு விழாவாக கொண்டாடப்படும்‌.

    மேலும்‌, தஞ்சாவூரிலுள்ள மாமன்னர்‌ ராஜராஜசோழன்‌ மணிமண்டபம்‌ மேம்படுத்தி பொலிவூட்டப்படும்‌ என்பதையும்‌ மகிழ்ச்சியுடன்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌.

    இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க:என்ன டெக்னிக்கா? மணலை கடத்துறாங்க பாருங்க.. 100 நாள் வேலை திட்டத்தில் நடந்த அட்டூழியம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....