மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 2) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மாமன்னர் ராஜாஜசோழனின் பிறந்த நாள் ஆண்டுதோறும் சதய விழாவாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாமன்னர் ராஜராஜசோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து வந்த கோரிக்கைகளை ஏற்று இந்த ஆண்டும், இனிவரும் ஆண்டுகளிலும் மாமன்னர் ராஜாஜசோழனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
மேலும், தஞ்சாவூரிலுள்ள மாமன்னர் ராஜராஜசோழன் மணிமண்டபம் மேம்படுத்தி பொலிவூட்டப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாமன்னர் ராஜராஜசோழனின் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/70u2Mzv1yI
— CMOTamilNadu (@CMOTamilnadu) November 2, 2022
இதையும் படிங்க:என்ன டெக்னிக்கா? மணலை கடத்துறாங்க பாருங்க.. 100 நாள் வேலை திட்டத்தில் நடந்த அட்டூழியம்