புதுச்சேரியில் கன மழை காரணமாக இன்று மற்றும் நாளை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய்யம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் புதுச்சேரியில் இரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
2 தினங்களுக்கு கன மழை பெய்யும் என்பதால் தொடர் மழை காரணமாக இன்று (11-11-2022) மற்றும் நாளை (12-11-2022) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுவதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளிலும், சாலைகளிலும் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கனமரை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: மழைநீர் வடிகால் பணிகள் 100% நிறைவு: அமைச்சர் எ.வ. வேலு