Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிமழை எதிரொலி: புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை...

    மழை எதிரொலி: புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை…

    புதுச்சேரியில் கன மழை காரணமாக இன்று மற்றும் நாளை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளார்.

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய்யம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் புதுச்சேரியில் இரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

    2 தினங்களுக்கு கன மழை பெய்யும் என்பதால் தொடர் மழை காரணமாக இன்று (11-11-2022) மற்றும் நாளை (12-11-2022) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுவதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளிலும், சாலைகளிலும் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கனமரை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    இதையும் படிங்கமழைநீர் வடிகால் பணிகள் 100% நிறைவு: அமைச்சர் எ.வ. வேலு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....