இந்திய ரயில்வே துறையின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்தியாவின் முக்கிய போக்குவரத்தாக இருப்பது ரயில்வே. தினந்தோறும் கோடி கணக்கில் மக்கள் ஒட்டுமொத்த இந்தியாவில் பயனிக்கின்றனர். இந்நிலையில், இந்திய ரயில்வே துறையின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும், இந்த ஹேக் மூலம் 3 கோடி ரயில் பயணிகளின் விவரங்கள் திருடப்பட்டுள்ளதாகவும், அவை தற்போது இணையத்தில் வெளிவந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுமட்டுமல்லாமல், பயணிகளின் பெயர், இணைய முகவரி, அலைபேசி எண், பாலினம், முகவரி மற்றும் இதர தனிப்பட்ட தகவல்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஹேக்கர்கள் தெரிவித்துள்ளனர். இத்துடன் இந்த விவரங்கள் விரைவில் விற்பனைக்கு வருமென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருட்டில் ஈடுபட்டவர்கள் தங்களே ஷேடோஹேக்கர்கஸ் என அழைத்துக் கொள்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனால், இதுவரை இந்த தகவல்களை ரயில்வே நிர்வாகம் உறுதி செய்யவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மூக்குவழியில் கொரோனா தடுப்பு மருந்து …ஜனவரி முதல் பயன்பாடு