குழந்தை பெறுவதற்கு மனித எலும்பால் செய்த பொடியை சாப்பிட கட்டாயப்படுத்திய மாமியார் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலம், புனேவில் ஒரு வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. குழந்தை இல்லாத காரணத்தினால் தனது மருமகளை மாமியார் ஒருவர், உள்ளூர் சாமியாரின் பேச்சை கேட்டு மனித எலும்புகளில் இருந்து தயாரிக்கப்பட்ட பொடியை சாப்பிடும்படி கட்டாயப்படுத்தியுள்ளார்.
மாமியாருடன் சேர்ந்து அந்தப்பெண்ணின் கணவரும் கட்டாயப்படுத்தி உள்ளார். இதனால், வேதனை அடைந்த அந்தப்பெண் சிங்காட் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து, அந்தப் பெண்ணின் கணவர், மாமியார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் அளித்திருந்த புகாரில், தனது மாமியார் தன்னை கொங்கன் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றதாகவும், அங்கு நீர்வீழ்ச்சியின் கீழ் அமர வைத்து அகோரி பயிற்சியில் ஈடுபட வைத்து கட்டாயப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும், இந்தச் சம்பவம் குறித்து கூடுதல் தகவல்கள் வெளியாகும் என்றும், காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைகளை களைந்து, நியூசிலாந்துக்கு எதிரான தொடரைக் கைப்பற்றுமா இந்தியா…