Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுகுறைகளை களைந்து, நியூசிலாந்துக்கு எதிரான தொடரைக் கைப்பற்றுமா இந்தியா...

    குறைகளை களைந்து, நியூசிலாந்துக்கு எதிரான தொடரைக் கைப்பற்றுமா இந்தியா…

    நியூசிலாந்து மற்றும் இந்திய அணி மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

    நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தச் சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள், 3 இருபது ஓவர் போட்டிகளில் அந்த அணி விளையாட உள்ளது. 

    இதில் முதல் ஒருநாள் போட்டி கடந்த 18-ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் சுப்மன் கில் 208 ரன்கள் எடுத்து சாதனைப் படைத்தார். 

    350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 337 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது. 

    இதன்மூலம், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், நியூசிலாந்து மற்றும் இந்திய அணி மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

    தொடரைக் கைப்பற்றியாக வேண்டுமென்ற முனைப்பில் இந்திய அணியும், தொடரை தக்கவைக்க வேண்டுமென்ற முனைப்பில் நியூசிலாந்து அணியும் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

    இந்தியாவை பொறுத்தவரையில், கடந்தப் போட்டியில் சுப்மன் கில் மட்டுமே ஜொலித்தார். இதர பேட்ஸ்மென்கள் தங்களது ஆட்டத்தை சிறப்பான முறையில் வெளிப்படுத்த தவறினர். அதை இப்போட்டியில் களைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சாளர்களில் சிராஜ் தவிர நியூசிலாந்து வீரர்களுக்கு யாரும் சவாலாக இல்லை என்ற நிலையும் இன்றைய போட்டியில் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    சந்தானத்தின் டைமிங் காமெடிகள்… வெடிக்கும் சிரிப்புச் சத்தம் – பிறந்தநாள் ஸ்பெஷல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....