Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஎன்னப்பா இப்படி பண்றியே... சிரிப்பலைகளை வரவழைத்த ரோஹித் சர்மாவின் செயல்

    என்னப்பா இப்படி பண்றியே… சிரிப்பலைகளை வரவழைத்த ரோஹித் சர்மாவின் செயல்

    இந்தியா – நியூசிலாந்து விளையாடும் ஒருநாள் போட்டியின் டாஸ் போடும் நிகழ்வின்போது நடந்த சம்பவம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

    நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தச் சுற்றுப்பயணத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்ற நிலையில், தற்போது இரண்டாவது ஒருநாள் போட்டி ராய்பூரில் நடைபெற்று வருகிறது. 

    இந்தப் போட்டியின் டாஸ் போடும் நிகழ்வின்போது நடந்த சம்பவம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இன்றைய போட்டிக்கான டாஸ் போடும் நிகழ்வின்போது, டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா சில விநாடிகள் என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாறினார். 

    டாஸை வென்றப் பிறகு ரோஹித் சர்மா, ‘நாங்கள்… நாங்கள்… ‘ என கூறியபடியே பந்துவீச்சா? பேட்டிங்கா? என்பதை உடனடியாக சொல்லவில்லை. அப்போது, அருகில் நின்றிருந்த நியூசிலாந்து கேப்டன் டாம் லதம் இதைக்கண்டு சிரிக்க ஆரம்பித்தார். 

    ரோஹித் சர்மாவும் தலையில் கை வைத்து யோசித்து 10 விநாடிகளுக்கு மேல் தடுமாறிய ரோஹித் சர்மா, பிறகு பந்துவீச்சைத் தேர்வு செய்வதாகச் சொன்னார். இச்செயலின்போது,  ரோஹித் சர்மாவே சிரிக்க ஆரம்பித்து விட்டார். இது சமந்தமான வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    குழந்தைப் பெற கட்டாயப்படுத்தி மாமியார் செய்த கொடூர செயல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....