ஜம்மு காஷ்மீரில் வாகனம் ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கொடுவா மாவட்டத்தில் கவுகளிலிருந்து டன்னு பரோல் என்ற பகுதிக்கு வாகனம் ஒன்று சென்றது. அப்போது சிலா என்ற பகுதியில் வாகனம் சென்றுக் கொண்டிருந்தபோது அங்கு இருக்கும் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தில், வாகனத்தில் இருந்த 4 நபர்கள் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். அங்கிருந்த படுகாயமடைந்த நபர் ஒருவர் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அந்த நபரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் காரணமாக இதுவரை 5 பேர் உயிரிழந்தனர்.
மேலும் இந்தச் சம்பவத்தில் 15 பேர் படுகாயம் அடைந்த நிலையில், அவர்கள் பில்லவர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் ஆளுநர் காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக பிரார்த்தனை செய்வதாகவும், அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Anguished by the loss of lives in a tragic road accident in Kathua. In this hour of grief, my thoughts are with the bereaved families. Praying for the speedy recovery of those injured. Directed district administration to provide best possible treatment to injured.
— Office of LG J&K (@OfficeOfLGJandK) January 20, 2023
ஓபிஎஸ்க்கு ஆதரவாக யாருமே இல்லை- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்