Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! தமிழகத்தை சேர்ந்த 8 நாகை மீனவர்கள் கைது

    இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! தமிழகத்தை சேர்ந்த 8 நாகை மீனவர்கள் கைது

    எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் 8 பேரை கைது செய்துள்ளது. 

    புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 87 விசைப்படகுகளில் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்த மீனவர்கள் சிலர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். 

    அச்சமயத்தில், அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 8 மீனவர்களை கைது செய்துள்ளது. 

    கைது செய்யப்பட்ட மீனவர்கள் 8 பேரையும் இலங்கைக்கு கொண்டு சென்று அங்கு சிறை வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    இந்நிலையில், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனே மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களின் குடும்பத்தினர் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

    இதையும் படிங்க: சென்னையில் ‘கஞ்சா கேக்’! தூண்டிலில் சிக்கிய மாணவர்கள்.. பகீர் கிளப்பும் அதிர்ச்சி தகவல்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....