எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் 8 பேரை கைது செய்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 87 விசைப்படகுகளில் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்த மீனவர்கள் சிலர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.
அச்சமயத்தில், அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 8 மீனவர்களை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் 8 பேரையும் இலங்கைக்கு கொண்டு சென்று அங்கு சிறை வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனே மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களின் குடும்பத்தினர் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையில் ‘கஞ்சா கேக்’! தூண்டிலில் சிக்கிய மாணவர்கள்.. பகீர் கிளப்பும் அதிர்ச்சி தகவல்கள்