புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,510 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் நேற்றைய கொரோனா தொற்று பாதிப்பு 4,043 ஆக இருந்த நிலையில், இன்று 4,510 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (செப்டம்பர் 21) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 4,510 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,45,47,599 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 46,216 ஆக குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 33 பேர் உயிரிழந்தனர். இதனால், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,403 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 5,640 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,39,72,980 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 216.95 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஆஸ்கார் வாய்ப்பை தவறவிட்ட ‘இரவின் நிழல்’! இந்தியா சார்பில் தேர்வான படம் எது தெரியுமா?