கடந்த இரண்டு வருடங்களாக வாலிபர்கள், இளம்பெண்கள், கல்லூரி மாணவர்கள், மாணவிகள் ஆகியோர் கஞ்சா கலந்த கேக்கை வாங்கி சாப்பிட்டு வந்துள்ளனர்.
தமிழகத்தில் ஏற்கனவே கஞ்சா சாக்லேட் விற்பனை பலரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது கஞ்சா கேக் விற்பனை குறித்து தகவல் கிடைத்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் கஞ்சா கேக் விற்பனை அமோகமாக நடப்பதாக நுங்கம்பாக்கம் காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையும் படிங்க: கோவில்பட்டியில் அடுத்த அதிர்ச்சி; பள்ளி கழிவறையில் 12-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை
இதைத்தொடர்ந்து, இந்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதன்பின்பு, நுங்கம்பாக்கத்தில் ஓட்டல் நடத்தி வரும் ஒருவரையும், பச்சை குத்தும் நிறுவனம் நடத்தி வந்த ஒருவரையும் பிடித்து காவல்துறை விசாரணை நடத்தினார்கள். மேலும், அவர்களிடம் இருந்து கஞ்சா கேக் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்களை விசாரித்ததில், இம்மாதிரியான கேக்குகளை கடந்த இரண்டு வருடங்களாக வாலிபர்கள், இளம்பெண்கள், கல்லூரி மாணவர்கள், மாணவிகள் ஆகியோரும் வாங்கி சாப்பிட்டு வந்துள்ளனர். இந்த கஞ்சா கலந்த கேக்கை, கேக் வியாபாரி ஒருவர் வீட்டில் வைத்து தயாரித்து கைதான இருவருக்கும் கொடுத்துள்ளார். கஞ்சா கேக்கை தயாரித்தவர் தற்போது தலைமறைவாகி உள்ளதால் அவரை காவல்துறை தேடி வருகின்றனர்.