தூத்துக்குடியில் பள்ளி கழிப்பறையில் 12- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள பசுவந்தனை பகுதியில் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பள்ளி விடுதியில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமநாதன் என்பவரது மகள் வைத்தீஸ்வரி என்ற மாணவி தங்கி 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், அம்மாணவி பள்ளி கழிவறையில் நேற்று (செப்டம்பர் 20) இரவு திடீரென சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையும் படிங்க: வாட்டி வதைக்கும் புதிய விதிமுறை! எதிர்ப்பு தெரிவித்து ஸ்விகி டெலிவரி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பசுவந்தனை காவல்துறையினர் மாணவி வைத்தீஸ்வரியின் உடலைக் கைப்பற்றி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, ராமநாதபுரம் மாவட்டத்தில் வைத்தீஸ்வரியின் சித்தி கடந்த வாரம் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அதனால் அவருக்கு உடல்நிலையும் சரியில்லாமல் போனதாகவும், இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
மேலும், உயிரிழந்த மாணவி வைத்தீஸ்வரியின் அறையில் ஒரு கடிதம் கிடைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்தும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
நடிகை பவுலின் ஜெசிகா தற்கொலையில் திடீர் திருப்பம்.. வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்