Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்திடீரென நிறுத்தப்பட்ட விஜய்யின் 'வாரிசு' படப்பிடிப்பு ? இயக்குனர் வம்சி மருத்துவமனையில் அனுமதி!

    திடீரென நிறுத்தப்பட்ட விஜய்யின் ‘வாரிசு’ படப்பிடிப்பு ? இயக்குனர் வம்சி மருத்துவமனையில் அனுமதி!

    தளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் வாரிசு திரைப்படத்தின் இயக்குநர் வம்சி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் படப்படிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 

    இந்திய நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். இவருக்கென்று பெரும் ரசிக பட்டாளமே இருக்கிறது. தற்போது இவர் ‘வாரிசு’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை இயக்குநர் வம்சி இயக்குகிறார். தில் ராஜூ தயாரிக்கிறார். 

    வாரிசு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. எப்படியாவது பொங்கலுக்கு திரைப்படத்தை ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் படக்குழு விறுவிறுப்பாக படப்பிடிப்புகளை நிகழ்த்தி வருகிறது. 

    இதையும் படிங்க: நடிகர் அஜித்குமார் படத்தின் டைட்டில் இதுவா? – இணையத்தில் வைரலாகும் ‘ஏகே 61’!

    இந்நிலையில், இத்திரைப்படத்தின் இயக்குநர் வம்சிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், ஆதலால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்திருக்கிறது. மேலும், மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஒரு வாரம் கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனராம். இதனால், இயக்குநர் வம்சி தற்போது ஓய்வில் உள்ளாராம். அவர் குணமாகி வந்த பின்னர், படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

    வாரிசு திரைப்படத்தில், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷியாம், சரத்குமார், சம்யுக்தா, குஷ்பு, யோகிபாபு என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. மேலும், விஜய்க்கு ஜோடியாக இத்திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். தமன் வாரிசு திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். 

    பொன்னியின் செல்வனுடன் போட்டியிடப்போகும் தனுஷ்-செல்வராகவன் கூட்டணி…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....