புதுச்சேரியில் தமிழ் தேசிய பேரியக்கத்தினர் புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து தகுதி வழங்க வேண்டும், தமிழினப்பாகுபாடு காட்டி புதுச்சேரியை வஞ்சிக்க கூடாது என கோரி தமிழ்த்தேசிய பேரியக்கத்தினர் புதுச்சேரி காமராஜர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் தேசிய பேரியக்க செயலாளர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மேலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புதுச்சேரி மாநிலம் முழுவதும் பரப்புரை இயக்கம் நடத்தப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதுமட்டுமின்றி தமிழர் கொடுக்கும் வரி இனிக்குது,உரிமை கொடுக்க கசக்குதா? போன்ற பதாகைகளை ஏந்தியபடி, புதுச்சேரியில் உள்ள சமூக நல அமைப்புகள் நிர்வாகிகள் திரளாக இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: இது ‘திராவிட மாடல்’இல்ல, ‘துரோக மாடல்’! ஆவின் பால் விலை உயர்வால் ஓபிஎஸ் ஆவேசம்