இங்கிலாந்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகிய பிறகு, பிரதமர் பதவிக்கான போட்டியில் 10 பேர் களமிறங்கியுள்ளனர்.
இங்கிலாந்தில் ஆளும் கட்சியின் எதிர்ப்பு காரணமாக பிரதமர் போரிஸ் ஜான்சன் சில தினங்களுக்கு முன் பதவி விலகினார். இதன்பின்னர், பிரதமர் பதவிக்கு போட்டியிட 10 பேர் களமிறங்கியுள்ளனர்.
வெற்றிடமாக உள்ள பிரதமர் பதவியைப் பொறுத்தவரையில், கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராக முடியும். அதனால், கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில், ரிஷி சுனக் உள்பட 10 பேர் களமிறங்கியுள்ளனர்.
முன்னாள் அமைச்சர்களான பாகிஸ்தான் வம்வசாளியைச் சேர்ந்த சஜித் ஜாவித், ஜெர்மி ஹன்ட், கிரான்ட் ஷாப்ஸ், அட்டர்னி ஜெனரல் சுயெல்லா பிராவர்மன், ஈராக் வம்சாவளியான, நதிம் ஸாஹவி, நைஜீரிய வம்சாவளியான கெமி பெடநாச், டாம் டுகன்டட் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.
நீண்டுக்கொண்டிருக்கும் போட்டி பட்டியலில் வர்த்தக அமைச்சர் பென்னி மோர்டான்ட் நேற்று இணைந்தார். வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் இப்போட்டியில் விரைவில் இணைவார் என்று தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுகிறதா ஈரான்?