Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமீண்டும் 100 அடியை எட்டியது மேட்டூர் அணையின் நீர்மட்டம்!

    மீண்டும் 100 அடியை எட்டியது மேட்டூர் அணையின் நீர்மட்டம்!

    மேட்டூர் அணையின் வரலாற்றில், 68-வது ஆண்டாக நான்கு நாள்களுக்கு பிறகு, இன்று அதிகாலை மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் 100 அடியாக உயர்ந்தது.

    காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாகவே மழை இல்லாத காரணத்தால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2500 கன அடிக்கு கீழ் குறைந்தது. இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. 

    அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருந்ததால், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24-ம் தேதி 100 அடியாக உயர்ந்த நீர்மட்டம் 257 நாள்களுக்கு பிறகு, கடந்த 8-ம் தேதி 100 அடிக்கும் கீழ் குறைந்தது. 

    இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கேரள வயநாட்டிலும் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி வருகிறது. இதனால், அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. உபரி நீர் வெளியேற்றப்படுவதன் காரணமாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 65 ஆயிரம் கன அடி வீதம் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

    நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. மேட்டூர் அணையின் வரலாற்றில், 68-வது ஆண்டாக நான்கு நாள்களுக்கு பிறகு இன்று அதிகாலை மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் 100 அடியாக உயர்ந்தது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. 

    நீர்வரத்தின் வேகம் அதிகரித்துள்ளதால், கோட்டையூர், அடிப்பாலாறு பகுதியிலுள்ள மீனவர்கள் இன்று மீன் பிடிக்க செல்லவில்லை.

    ஒக்கேனக்கலில் குளிக்க மற்றும் பரிசல் இயக்க 3-வது நாளாக தடை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....