பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 13 ஆம் தேதி முதல் அரசு விரைவுப் பேருந்துகளில் பயணம் செய்ய இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை வருகிற 2023 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கல் பண்டிகையை கொண்டாட பெரும்பாலான மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்து இருப்பர்.
தமிழக அரசு விரைவுப் பேருந்துகளில் 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் செல்லக்கூடிய அரசு பேருந்துகளுக்கு 30 நாட்களுக்கு முன்பில் இருந்தே முன்பதிவு செய்யக்கூடிய வசதி நடைமுறையில் இருந்து வருகிறது.
இதன்படி ஜனவரி 12 ஆம் தேதி பயணம் செய்வதற்கு நேற்று முன்பதிவு ஆரம்பம் ஆன நிலையில், இன்று ஜனவரி 13 ஆம் தேதி பயணம் செய்வதற்கான முன்பதிவு தொடங்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொங்கலுக்கு 2 நாட்களுக்கு முன்பாகவும் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவோர் அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பெரும் காத்திருப்புக்குப் பிறகு வெளியான ‘ஸ்பைடர்மேன்’ டிரெய்லர்… குஷியில் ரசிகர்கள்!