வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 278 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரும், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரும் நடைபெறவுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்கதேச அணி கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, இன்று காலை 9 மணியளவில் சிட்டகாங்கில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடும் முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, கே.எல்.ராகுல் மற்றும் சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இவர்களுள் 20 ரன் எடுத்த நிலையில் சுப்மன் கில் ஆட்டமிழந்தார். இவரைத்தொடர்ந்து, கே. எல்.ராகுல் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.
இதைத்தொடர்ந்து, விராட் கோலி புஜாராவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விராட் கோலி 1 ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இதன்பின்பு, ரிஷப் பண்ட் களமிறங்கினார். புஜாராவும், ரிஷப் பண்டும் சிறப்பாக விளையாட தொடங்கினர். புஜாரா நிதானமாக ஆட, பண்ட் சற்று அதிரடியாக விளையாடினார். 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பண்ட் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
களத்தில் இருந்த புஜாராவுடன், ஷ்ரேயாஸ் ஐயர் இணைந்தார். இவர்களின் கூட்டணி இந்திய அணிக்கு பலத்தை தந்தது. இருவரும் நிதானமாக விளையாடிக் கொண்டிருக்க, சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 90 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தனது விக்கைட்டை இழந்தார். இவரைத்தொடர்ந்து களமிறங்கிய அக்சர் படேல் 14 ரன்களுக்கு அவுட் ஆனார்.
முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணியானது 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இந்த ஆண்டின் டாப் 10 திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா? – வெளிவந்த தகவல்..