பீகார்: பூரண மதுவிலக்கு அமலில் உள்ள பீகார் மாநிலத்தின் வறண்ட பகுதியான சாப்ராவில் கள்ள சாராயம் குடித்து குறைந்தது 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது முதல்வர் நிதிஷ் குமாரின் மதுவிலக்குக் கொள்கையின் தவறான அமலாக்கத்தில் அரசியல் புயலைத் தூண்டியுள்ளது. பலியானவர்கள் அனைவரும் சரண் மாவட்டத்தின் மஷ்ராக் மற்றும் இஷாவ்பூர் பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் என்று கூறப்படுகிறது. “இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,”.
நாட்டில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலங்களில் பீகாரும் ஒன்றாகும். இம்மாநிலத்தில் மது அருந்தவும் மது விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தடையை மீறி பெரும்பாலான பகுதிகளில் கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக அடிக்கடி தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் பீகாரின் சரண் மாவட்டத்தில் உள்ள சாப்ரா பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததாகக் 20 பேர் உயிரிழந்திருப்பத்து அப்பகுதி மக்களிடையே மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாப்ரா பகுதியில் இஷாவ்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சிலர் நேற்றிரவு (டிச.,13) கூட்டாக மது அருந்தியுள்ளனர். பிறகு அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு அங்கிருந்து போதையில் வீடு திரும்பியுள்ளனர். வீடு திரும்பிய அனைவருக்கும் திடீரென உடல்நிலை மோசமடையவே ,அதில் முதலில் 5 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.
மீதமிருந்த மற்றவர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் .இதில் பலர் மிகவும் மோசமான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டதை அடுத்து பலி எண்ணிக்கை 20 கடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உடற்கூறாய்வு முடிந்த பின்னரே இறந்தவர்களின் மரணத்திற்கான காரணம் என்ன என்பது தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சந்தேகத்திற்கிடமான இந்த மரணத்திற்கான காரணத்தை இஷாவ்பூர் காவல்துறை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இந்நிலையில் மாதேபூர் டி.எஸ்.பி., சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியுள்ளார் . ஏப்ரல் 2016 முதல் பீகாரில் மது விற்பனை மற்றும் நுகர்வு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால், விசாரணையைத் தவிர்க்க தலைமறைவாக இருக்கும் மேலும் நோய்வாய்ப்பட்ட நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இறந்தவர்களில் அமித் ரஞ்சன், சாப்ரா சதார் மருத்துவமனையில் சிகிச்சையின் போது இறந்தார். மாவட்ட காவல் துறையினர் மருத்துவமனைக்கு வந்து ரஞ்சனின் உடலைக் கைப்பற்றியுள்ளனர்.
இதேபோல் மஹராஜ்கஞ்ச் எம்.பி ஜனார்தன் சிங் சிக்ரிவால் பகுதியிலும் சட்டவிரோத மது அருந்தியதால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
இறந்தவரின் உறவினர்கள் மரணத்திற்கு காரணம் போலி மதுபானம் என்று கூறியுள்ளனர், ஆனால் போலீசார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஆகஸ்ட் நடுப்பகுதியில் இதே மாவட்டத்தில் இதேபோன்ற வழக்கில் புல்பூர் கிராமத்தில், ஐந்து பேர் போலி மதுவை உட்கொண்டதால் இறந்தனர்.
Bihar | 3 people died after allegedly consuming spurious liquor in Chhapra area of Saran district.
3 died, bodies sent for postmortem, these look like suspicious deaths. I have also received information that some more are receiving treatment at different places: S Kumar, SP pic.twitter.com/J3o0Nud6hd
— ANI (@ANI) December 14, 2022
பீகார் சட்டசபையில் சலசலப்பு:
பாரதிய ஜனதா கட்சியின் (பிஜேபி) சட்டமன்ற உறுப்பினர்களால் பீகார் சட்டமன்றத்தின் தற்போதைய அமர்வில் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டது.
முதல்வர் நிதிஷ் குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பாஜக உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தியவாறும் உரத்த முழக்கங்களை எழுப்பிய பேரவை நடவடிக்கைகளின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
பல முறை முறையீடுகளுக்குப் பிறகும் பாஜக எம்எல்ஏக்கள் செயல்பட அனுமதிக்காததால், வெளிப்படையாக வருத்தப்பட்ட முதல்வர் நிதீஷ் குமார், “இந்தச் சட்டத்தை நீங்கள் (பாஜக) ஆதரித்தவர், இப்போது அதை திரும்பப் பெறக் கோருகிறீர்கள். நீங்கள் மது அருந்துகிறீர்கள். நீங்கள் அனைவரும் பைத்தியமாகிவிட்டீர்கள் என்று கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார் .
பீகாரில் எல்லாப் பகுதிகளிலும் மதுபானம் எளிதாகக் கிடைக்கிறது என்று பல மாதங்களாக, எதிர்க்கட்சித் தலைவர்களும், பிற கட்சிகளும் மதுவிலக்கை திரும்பப் பெறக் கோரி வாதிட்டு வருகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த குர்ஹானி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு மதுவிலக்கை காரணம் என்று ஆளும் ஜேடியு-ஆர்ஜேடி கூட்டணியின் ஒரு பகுதி தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பல அரசியல் தலைவர்களால் தோல்வியுற்ற விவகாரம் என்று அழைக்கப்படும் பீகாரின் மதுவிலக்கு கொள்கையில் இந்த மரணங்கள் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரே வீட்டில் இருந்து இரண்டு முதல்வர்களை கூட அறிவிக்கலாம்- அமமுக பொதுச்செயலாளர்