Thursday, March 28, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வானில் பறக்கும் போதே விமானியின் அறைக்குள் நுழைந்து அத்துமீறிய முன்னணி நடிகர்; நடந்தது என்ன தெரியுமா?

    வானில் பறக்கும் போதே விமானியின் அறைக்குள் நுழைந்து அத்துமீறிய முன்னணி நடிகர்; நடந்தது என்ன தெரியுமா?

    பிரபல மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ மது போதையில் விமானத்தில் அத்துமீறியதால் அதிகாரிகள் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். 

    நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பீஸ்ட் திரைபபடத்தில் தீவிரவாதி கதாபாத்திரத்தில் நடித்தவர் ஷைன் டாம் சாக்கோ. 

    இவர் மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். பீஸ்ட் திரைப்படத்தில் தன்னை டம்மியாக காட்டிவிட்டதாகவும், அதிக எடையை தூக்கும் போது முகத்தில் கடினம் தெரியும். அப்படி எந்தவித முக பாவனைகளும் விஜய்யின் முகத்தில் தெரியவில்லை என்றும் கூறி இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷைன் டாம் சாக்கோவை கலாய்த்தனர். பின்பு அவர் காணொளி வெளியிட்டு  மன்னிப்பு கேட்டார். 

    இந்நிலையில் பாரத சர்க்கஸ் என்ற மலையாள திரைப்படத்தில் ஷைன் டாம் சாக்கோ நடித்துள்ளார். தற்போது இந்தத் திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக ஷைன் டாம் சாக்கோ கடந்த 10 ஆம் தேதி அப்படக்குழுவுடன் ஏர் இந்தியா விமானத்தில் துபாய் சென்றார். 

    அப்போது, அவர் விமானத்தில் உள்ள விமானியின் அறைக்குள் நுழைய முயற்சித்துள்ளார். விமான ஊழியர்கள் தடுத்தும் அவர் மீண்டும் மீண்டும் முயற்சி செய்துள்ளார். பிறகு குடிவரவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து விமானம் தரையிறங்கியதும் அவர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். 

    அப்போது அவரிடம் சோதனை நடத்தப்பட்டதில், ஷைன் டாம் சாக்கோ மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. மேலும் அவர் விமானியின் அறைக்கு சென்று, புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்ட்டாகிராமில் பதிவிட நினைத்தாகவும் தெரிவித்தார். இதையடுத்து அதிகாரிகள் ஷைன் டாம் சாக்கோவை எச்சரித்து அடுத்த விமானத்தில் கேரளாவுக்கு அனுப்பி வைத்தனர்.

    புதுச்சேரி, மக்கள் வாழ தகுதியான நகரமா என்பதை உறுதி செய்ய இணையவழி கணக்கெடுப்பு…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....