Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இலங்கைஇலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவி விலக தயார்!

    இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவி விலக தயார்!

    இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவியில் இருந்து விலகுவதாக தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

    இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. இந்த நெருக்கடியால், இலங்கையில் உணவு, சுகாதாரம், எரிபொருள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இலங்கை மக்கள் அந்நாட்டு அரசை எதிர்த்து போராடி வருகின்றனர். இவர்களின் போராட்டத்தின் விளைவாக பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். இதையடுத்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலக வேண்டுமென போராட்டங்கள் தொடர்ந்து வலுத்து வருகின்றன. 

    கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக இன்று மாபெரும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் இலங்கை அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். 

    போராட்டத்தின் மத்தியில், அதிபர் மாளிகையில் இருந்த கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து வெளியேறினார். அதிபர் மாளிகை முற்றுகைக்கு காவல்துறை ஆதரவாக செயல்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தது. 

    இதைத்தொடர்ந்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு சொந்தமான உடமைகள் இலங்கைக்கு சொந்தமான கடற்படை கப்பலில் ஏற்றப்படுவது போன்ற காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

    இதைத்தொடர்ந்து, அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலகப் போவதாக தனது அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    சூடுபிடிக்கும் இலங்கை அரசியல்: அதிபர் மாளிகை முற்றுகை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....