தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 510 இடங்களுக்கு இன்று இடைத் தேர்தல் நடைபெற்றது.
கடந்த ஜூன் மாதம் 20 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி, ஜூன் 27-ம் தேதி முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து 28-ம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்றது. இந்நிலையில், இன்று உள்ளாட்சி இடைத் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது.
கிராப்புறங்களில் ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்களுக்கான 498 பதவிகளும் நகர்ப்புறங்களில் மாநகராட்சி கவுன்சிலர், நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான 12 பதவிகளும், என மொத்தம் 510 இடங்கள் காலியாக உள்ளது.
இந்நிலையில், இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. மேலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்று நடைபெற்ற உள்ளாட்சி இடைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஜூலை 12-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
இலங்கையில் இருந்து தப்பி ஓடினாரா அதிபர் கோட்டபய ராஜபக்சே?