பிரதமர் மோடியின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு, இந்திய காடுகளில் சீட்டாக்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை அவரே தொடங்கி வைத்தார்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நமீபியாவில் இருந்து 5 ஆண் சீட்டாக்கள் மற்றும் 3 பெண் சீட்டாக்கள் என மொத்தம் 8 சீட்டாக்கள் முதலில், ராஜஸ்தான் ஜெய்ப்பூருக்கு சரக்கு விமானத்தில் கொண்டுவரப்பட்டன.
பிறகு, அங்கிருந்து ஹெலிகாப்டரில் மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய வனவிலங்கு பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டன. மேலும் விமான பயணத்தின் போது சீட்டாக்களுக்கு உணவு எதுவும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், பிரதமர் மோடியின் பிறந்த நாளான இன்று (செப்டம்பர் 17) இந்தியக் காடுகளில் சீட்டாக்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை அவரே தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம், இந்திய நாட்டில் சுமார் 70 ஆண்டுகளுக்கு பிறகு, அதிகமான சீட்டாக்கள் பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
A long wait is over, the Cheetahs have a home in India at the Kuno National Park. pic.twitter.com/8FqZAOi62F
— Narendra Modi (@narendramodi) September 17, 2022
இதையும் படிங்க: 1000 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போட்டு.. இந்தியாவிற்கு வருகை தரும் 8 சிறுத்தைகள்..?