பட்டியலினப் பள்ளி மாணவர்களுக்கு தின்பண்டம் தர மறுத்த கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பெரும்புத்தூர் பஞ்சாயத்து பாஞ்சாங்குளம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆதி திராவிடப் பள்ளி ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், ஆதி திராவிடப் பள்ளி மாணவர்கள் தின்பண்டம் வாங்குவதற்காகக் அங்குள்ள பெட்டிக் கடைக்கு சென்றனர். அப்போது கடை உரிமையாளர், ஊர்க்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் இனி உங்களுக்கு தின்பண்டம் தர முடியாது என்றும் வீட்டில் சென்று இதனைச் சொல்லுமாறும் கூறியுள்ளார்.
இந்த நிகழ்வானது வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக அந்த பெட்டிக் கடையின் உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி, கோட்டாட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் வருவாய்த் துறையினர் அந்த பெட்டிக்கடைக்கு சீல் வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னை விரைவில் கடலில் மூழ்கும் அபாயம் ! சென்னை மாநகராட்சி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்