பிரதமர் மோடி காந்தி கிராமியப் பலக்லைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க நவம்பர் 11 ஆம் தேதி தமிழகம் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரை 4 வழிச்சாலையில் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் இருக்கிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி 35-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அப்போதைய மாத்திரை மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் நிஷாந்த் கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை அளித்தார்.
இதன் பிறகு, கொரோனா பெருந்தொற்று காரணமாக கட்டுப்பாடுகளால் கடந்த 3 ஆண்டுகளாக காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை.
இந்நிலையில், இந்த ஆண்டு காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா வருகிற நவம்பர் மாதம் 11 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காலத்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நாளை மறுநாள் தொடங்கும் வடகிழக்கு பருவமழை: படிப்படியாக அதிகரிக்கும் என தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி