தமிழ்நாட்டில் நாளை மறுநாள் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால்,படிப்படியாக மழை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர் தமிழ்நாட்டில் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்றும் ,பருவமழை தொடங்குவதற்கான சூழல் நிலவுவதால், வரும் நாட்களில் மழை பொழிவு படிப்படியாக அதிகரிக்கும் என்றும் கூறினார் .
மேலும் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்குகிறது. இதனால் நவம்பர் 4ம் தேதி வரை மழையானது படிப்படியாக அதிகரிக்கும். சிட்ரங் புயலால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு இயல்பை விட 45% அதிகமாக பெய்துள்ளது.தென்மேற்கு பருவமழையானது அக்டோபர் 23-ஆம் தேதியோடு முழுமையாக விலகியது என்று தெரிவித்துள்ளார் .
அதேபோல் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்.சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கோவை சம்பவத்தில் முதலில் அண்ணாமலையை விசாரிக்க வேண்டும்; அமைச்சர் செந்தில் பாலாஜி பாய்ச்சல்