உத்தர பிரதேசத்தில் ரசாயனம் கலந்த தேநீர் அருந்திய தாத்தா மற்றும் அவரது பேரக்குழந்தைகள் என 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தச் சம்பவம் உத்தரபிரதேச மாநிலம், நாக்லா கன்ஹாய் கிராமத்தில் நடைபெற்றது.
இதில் சிவானந்தன், அவரது இரு மகன்கள் சிவாங் மற்றும் திவ்யான்ஷ் ஆகியோரும், சிவானந்தனின் மாமனார் ரவீந்திர சிங் மற்றும் வர்கள் வீட்டின் அருகில் வசிக்கும் சோப்ரான் ஆகியோரும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிவானந்தன் வீட்டில் தேநீர் அருந்தியவுடன் அவர்களுக்கு மயக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ரவீந்திர சிங் மற்றும் அவரது பேரக்குழந்தைகள் இருவரும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனையில் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, மற்ற இருவருக்கும் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இவ்வாறு, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தேநீர் பொடிக்கு பதிலாக ரசாயன பொடி மாறுதலாக பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவை சம்பவத்தில் முதலில் அண்ணாமலையை விசாரிக்க வேண்டும்; அமைச்சர் செந்தில் பாலாஜி பாய்ச்சல்