Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுவெடிகுண்டுகளை தயாரிக்க யூடியூப்பை பார்த்து பயிற்சி எடுத்துக்கொண்டாரா முபின்? வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்

    வெடிகுண்டுகளை தயாரிக்க யூடியூப்பை பார்த்து பயிற்சி எடுத்துக்கொண்டாரா முபின்? வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்

    பிரபல ஆன்லைன் நிறுவனங்கள் மூலமாக ஜமேஷா முபீன் வெடிபொருட்களை ஆர்டர் செய்து வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. 

    கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் என்ஐஏ அதிகாரிகளும் விசாரணையை முடிக்கிவிட்டுள்ளனர். கார் வெடிப்பில் சிக்கி ஜமேஷா முபீன் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தியதில் 75 கிலோ வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது. 

    இந்த வெடிபொருட்களை வைத்து மிகப்பெரிய திட்டத்தை அரங்கேற்ற முபின் திட்டமிட்டது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிப்பொருட்களை முபின் யாரிடமிருந்து எப்படி வாங்கினார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் தற்போது அதிர்ச்சியான பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன. 

    கடந்த 2 ஆண்டுகளாக முபீன் பிளிப்காட், அமேசான் போன்ற பிரபல ஆன்லைன் நிறுவனங்கள் மூலமாக வெடிபொருட்களை வாங்கி தனது வீட்டில் சேமித்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டுகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருட்களான பொட்டாசியம் நைட்ரேட், சல்பர் பவுடர் ஆகியவற்றை முபின் வாங்கியது தெரியவந்துள்ளது. இந்த வெடி மருந்துகளை பயன்படுத்தி சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை தயாரிக்க முபின் திட்டமிட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: தமிழகத்திலும் நரபலி கொடூரமா? புதைக்கப்பட்ட சிறுமியின் தலையை வெட்டி எடுத்து சென்ற மர்மகும்பல்

    கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு முகவரிகளில் இந்த வெடிபொருட்களை முபின் வாங்கியிருப்பது உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் மேலும் பலரை விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 

    எந்தெந்த முகவரிகளில் வெடிபொருட்கள் வாங்கப்பட்டுள்ளன என்பது குறித்த விவரங்களை சேகரித்துள்ள காவல்துறை அந்த முகவரிகளில் வசித்து வருபவர்களுக்கும் கார் வெடிப்பில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    வெடிபொருட்களை வாங்குவதற்கு ஆன்லைன் வழியாக முபின் பணம் செலுத்தி இருக்கும் ஆதாரங்களையும் காவல்துறை கைப்பற்றியிருக்கிறது . முபினும் அவரது உறவினர்களான அசார், அப்துல் ஆகியோர் சேர்ந்து வெடிகுண்டுகளை தயாரிக்கும் முதல் கட்ட பயிற்சியில் ஈடுபட்டதும் தற்போது அம்பலமாகி உள்ளது. 

    இதற்காக இவர்கள் 3 பேரும் வெடிகுண்டுகளை தயாரிப்பது எப்படி என்பது குறித்து யூடியூப்பை பார்த்து பயிற்சி பெற்றிருக்கும் திடுக்கிடும் தகவல்களும் வெளிவந்துள்ளன.

    இதையும் படிங்க: “நீங்கள் அன்புக்காக எல்லாவற்றையும் செய்தீர்கள்”: அம்மா சோனியா குறித்து மகள் பகிர்ந்த உணர்ச்சிபூர்வமான பதிவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....