பிலிப்பைன்ஸில் உள்ள மணிலா பகுதியில் 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள லுசோன் தீவின் அப்ரா மாகாணத்தில் ஜூலை 27-ம் தேதியாகிய இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால், அப்ரா மாகாணத்தில் உள்ள வீடுகளின் சுவர்களில் விரிசல் விழுந்துள்ளது. மேலும், மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி பொது இடங்களுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
உக்ரைனில் குண்டு மழை- பதறவைக்கும் காணொளி