பீகாரில் ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய நபர், காயங்கள் இன்றி தப்பித்த காணொளி இணையத்தில் உலாவிக் கொண்டு வருகிறது.
அந்தக் காணொளியில், ஓடும் சரக்கு ரயிலுக்கு அடியில் ஒருவர் படுத்துக்கொண்டு உள்ளார். சிறிது நேரம் அப்படியே இருந்த அந்த நபர், ரயில் சென்றதும், அங்கு எதுவும் நடக்காதது போல் அவரது பையை எடுத்துக்கொண்டு நடந்து செல்கிறார். இவ்வாறு அந்தக் காணொளியில் பதிவாகி உள்ளது.
இந்தச் சம்பவம் கஹல்கான் ரயில் நிலையத்தில் நடந்ததாகக் சொல்லப்படுகிறது. அந்த நபர் கஹல்கான் ரயில் நிலையத்தில் மூன்றாவது நடைமேடையில் நின்றுக் கொண்டிருந்த ரயிலைப் பிடிப்பதற்காக அவ்வாறு தண்டவாளத்தைக் கடக்க முயற்சித்துள்ளார். அந்தச் சமயம் பார்த்து அங்கு சரக்கு ரயில் வரவே, அவர் தண்டவாளத்தின் நடுவே அப்படியே படுத்துள்ளார். இதனால் அவரின் உயிர்த் தப்பியுள்ளது.
बिहार के भागलपुर में खड़ी ट्रेन के नीचे से निकलने में फंसा यात्री..किसी तरह बच गई जान@IRCTCofficial @RailwaySeva pic.twitter.com/4RDHrZNZOH
— Thakur Shaktilochan shandilya (@Ershaktilochan) November 10, 2022
இது தொடர்பான காணொளி தற்போது இணையத்தில் பகிரப்பட்டு, நெட்டிசன்கள் கையில் சிக்கியுள்ளது.
இதையும் படிங்க: சுற்றுலா பயணிகளிடையே தாவிக் குதித்து அன்பை பகிரும் சிங்கக் குட்டி! வைரல் காணொளி