Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇனிமேல் இதற்கும் பான் கார்டு அவசியமாம்; அறிவிப்பை வெளியிட்டது வரிகள் வாரியம்!

    இனிமேல் இதற்கும் பான் கார்டு அவசியமாம்; அறிவிப்பை வெளியிட்டது வரிகள் வாரியம்!

    ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் பணம் எடுக்கவும், பணம் போடவும் ஆதார் அல்லது பான் கார்டு கட்டாயம் என அரசு தெரிவித்துள்ளது.

    வங்கிகளில் ஒரு நாளில் 50 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கும் மேல் பணம் டெபாசிட் செய்தால் பான் எண் கட்டாயம் என்கிற விதி உள்ளது. ஆனால் பணம் எடுப்பதற்கு இதுபோன்று பான் கார்ட் தேவையில்லை. அத்துடன் இதற்கு ஆண்டு வரம்பும் எதுவும் இல்லாமல் இருந்தது.

    இந்த நிலையில் தற்போது வங்கியில் பணம் போடவும், எடுக்கவும் புதிய விதிமுறைகளை அரசு வகுத்து உள்ளது. இந்த புதிய விதிகள் இம்மாதம் 26 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.

    ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட கணக்குகளில் இருந்து ஒரு நிதியாண்டில் ஒருவர் ரூபாய் 20 லட்சத்திற்கும் மேல் பணம் எடுத்தாலும், போட்டாலும், பான் அல்லது ஆதார் அவசியம்.

    இந்தப் புதிய விதிகளின்படி, இனி ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட கணக்குகளில் இருந்து ஒரு நிதியாண்டில் ஒருவர்  ரூபாய் 20 லட்சத்திற்கும் மேல் பணம் எடுத்தாலும், போட்டாலும், பான் அல்லது ஆதார் எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

    இதன்மூலம் ஒரு தனிநபர் ஒரு நிதியாண்டில் மொத்தம் எவ்வளவு பணப் பரிவர்த்தனை செய்கிறார் என்பதையும் அதற்கு முறையாக வரிப்பிடித்தம் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் எளிதாக அறிந்துகொள்ள முடியும்.

    அந்த புதிய விதிகள் என்னவெனில், வங்கி, தபால் அலுவலகம், கூட்டுறவு வங்கி போன்றவற்றில், ஒருவர் ஒரு நிதியாண்டில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கணக்கில், ரூபாய் 20 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை செலுத்துவதற்கும், எடுப்பதற்கும் ஆதார் அல்லது பான் கார்டு கட்டாயமாகும்.

    அதேபோல், வங்கி, தபால் அலுவலகம், கூட்டுறவு வங்கிகளில்நடப்பு கணக்கு (Current Account) தொடங்கவோ, ரொக்க கடன் கணக்கு (Cash credit account) தொடங்கவோ பான் கார்டு அல்லது ஆதார் கார்டு கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேற்கூறிய விஷயங்களில் பரிவர்த்தனையின்போது பான் கார்டு எண் அல்லது ஆதார் கார்டு எண்ணை குறிப்பிட வேண்டும். இந்த அறிவிப்பை அரசிதழில், மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது.

    இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு; பங்குச்சந்தை நிலவரம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....