Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்பேரணியின்போது பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு துப்பாக்கிச்சூடு

    பேரணியின்போது பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு துப்பாக்கிச்சூடு

    பாகிஸ்தான் பேரணியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் காயமடைந்ததகாக தகவல் வெளியாகியுள்ளன. 

    பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் வாசிராபாத் நகரின் ஸாபர் அலி கான் சவுக் என்ற பகுதியில் பேரணியில் கலந்துகொண்டார். 

    அப்போது இம்ரான் கான் இருந்த கண்டெய்னர் லாரியின் மீது மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

    இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இம்ரான் கானின் காலில் துப்பாக்கி கூட்னு பாய்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    இதையடுத்து, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். 

    இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலரும் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    கடந்த ஜூலை மாதம் பாகிஸ்தானில் இவரது தலைமையிலான தெஹ்ரீக்-எ-இன்சாப் கட்சியின் ஆட்சி கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: கோவை கார் வெடிப்பு சம்பவம்; கண்காணிப்பு வளையத்துக்குள் 900 பேரை கொண்டு வந்தது எப்படி..?!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....