Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமோர்பி பால விபத்து; முழுவதுமாக மீட்கப்பட்ட உடல்கள்! - வெளிவந்த அதிர்ச்சி தகவல்

    மோர்பி பால விபத்து; முழுவதுமாக மீட்கப்பட்ட உடல்கள்! – வெளிவந்த அதிர்ச்சி தகவல்

    மோர்பி பால விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் அனைத்தும் மீட்கப்பட்டுவிட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    குஜராத் மாநிலம் மோர்பி நகரில் உள்ள மச்சு நதி மீது கடந்த 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 230 மீட்டர் நீள தொங்கு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலமானது சுற்றுலாவிற்கு வரும் முக்கிய இடமாக திகழ்கிறது. 

    அந்த பாலத்தில் கடந்த 6 மாதங்களாக தனியார் நிறுவனம் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தது. இதைத்தொடர்ந்து, மூடப்பட்டிருந்த அந்தப் பாலம், புனரமைப்புப் பணிகள் முடிந்து ஐந்து நாள்களுக்கு முன்பு அதாவது, அக்டோபர் 26-ம் தேதி திறக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, அந்தப் பாலத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகளவில் மக்கள் பாலத்துக்கு வந்திருந்தனர். அப்போது பொதுமக்களின் எடையைத் தாங்க முடியாமல், அந்தப் பாலம் மாலை 6.30 மணியளவில் அறுந்து விபத்து ஏற்பட்டது. பாலத்தில் இருந்தவர்கள் நதியில் விழுந்தனர். 

    இதனையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் நதியில் மூழ்கியவர்களில் மீட்கும் பணி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நடந்து வந்தது. 

    இந்நிலையில், தற்போது விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் அனைத்தும் மீட்கப்பட்டுவிட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இதுவரையில் 135 பேர் உயிரிழந்தனர் என்றும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    இதையும் படிங்க: பதட்டத்தில் ட்விட்டர் ஊழியர்கள்: எலான் மஸ்கின் அடுத்த கட்ட அதிரடி என்ன தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....