Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்ஆப்பரேஷன் திரிசூளம் திட்டம்: ரவுடிகளின் வீடுகளில் போலீசார் திடீர் சோதனை..!

    ஆப்பரேஷன் திரிசூளம் திட்டம்: ரவுடிகளின் வீடுகளில் போலீசார் திடீர் சோதனை..!

    புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதிகளில் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

    புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஆப்பரேஷன் திரிசூளம் திட்டம் ஏற்படுத்தி போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அவ்வப்போது பல்வேறு பல்வேறு பகுதிகளில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தி ரவுடிகளின் வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    அந்த வகையில் கருவடிக்குப்பம் பகுதிகளில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தீபிகா தலைமையில், காவல் கண்காணிப்பாளர் பக்தவச்சலம் முன்னிலையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். தொடர்ந்து அங்குள்ள ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது வீடுகளில் ஆயுதங்கள் ஏதேனும் உள்ளனவா என்று சோதனை நடத்தினர். மேலும் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள ரவுடிகள் வீடுகளில் சோதனை நடத்தி பதுங்கி உள்ளனரா என தேடுதல் நடத்தினர்.

    பின்னர் வீட்டில் இருந்தவர்களிடம் தடை செய்யப்பட்ட ரவுடிகள் ஊருக்குள் நுழைந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். மேலும் அருகில் உள்ள பொதுமக்களிடம், தடை செய்யப்பட்ட ரவுடிகள் ஊருக்குள் நுழைந்தால் உடனடியாக காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். போலீசாரின் தீடீர் சோதனை காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையும் படிங்கமுதலாம் உலகப்போர் 104-ஆம் ஆண்டு நினைவு தினம்: உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....