என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் 8 மாநிலங்களில் இருந்து 170-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மூலமாக குழுக்களை உருவாக்கி, பல்வேறு தீவிரவாத பயிற்சிகள் மற்றும் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்று வருவதாக என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் வீடுகள் மற்றும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களில் இந்த சோதனையானது நடைபெற்றது.
இந்தியா முழுவதும் சுமார் 15 மாநிலங்களில் 93 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்றது. மொத்தத்தில் இந்த சோதனையில் இதுவரையில் 8 மாநிலங்களில் இருந்து 170 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு நிதி திரட்டியது தொடர்பாக கைதானவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். உத்தரபிரதேசத்தில் சரத்பூர், மீரட், சியானா பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். டெல்லியில் சகின்பாத் மற்றும் ஜமியா பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகளும், அதிரடி படை வீரர்களும் ஒருங்கிணைந்து சோதனை மேற்கொண்டு உள்ளனர்.
இந்த சோதனைகளுக்கு மத்தியில் உள்துறை அமைச்சகத்தில் என்.ஐ.ஏ, அமலக்காத்துறை தலைவர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: முன்னேறிய இந்திய அணி…சத்தமில்லாமல் ஒரு சாதனை!