சர்வதேச இருபது ஓவர் போட்டிகளில் அதிகமான வெற்றிகளைப் பெற்ற இந்திய கேப்டன்கள் வரிசையில் ரோஹித் சர்மா முன்னேறியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்த வெற்றியின் மூலம், இருபது ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதன் மூலம் ரோஹித் சர்மா 42 போட்டிகளில் தலைமை தாங்கி 33 போட்டிகள் வென்றுள்ளார். மேலும், விராட் கோலி தலைமையில் விளையாடிய 50 போட்டிகளில் 32 போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது. எம்.எஸ்.தோனி தலைமை தாங்கிய 72 போட்டிகளில் இந்திய அணி 42 போட்டிகளில் வென்றுள்ளது.
வெற்றி கணக்கை வைத்து தரவரிசைப்படுத்தினால், எம்.எஸ். தோனி முதலிடத்தில் உள்ளார்.
- எம்.எஸ். தோனி – 42 வெற்றிகள்
- ரோஹித் சர்மா – 33 வெற்றிகள்
- விராட் கோலி – 32 வெற்றிகள்
இந்தியா நாளை மோதவிருக்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இருபது ஓவர் தொடருக்கு ரோஹித் சர்மா தலைமைத் தாங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘பொய் சொல்ல வேண்டியதில்லை’ – தீப்தி சர்மா பேச்சு குறித்து இங்கிலாந்து கேப்டன் பதில்!