Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா118 நாட்களில் இல்லாத அளவுக்கு இன்று குறைந்த கொரோனா பாதிப்பு

    118 நாட்களில் இல்லாத அளவுக்கு இன்று குறைந்த கொரோனா பாதிப்பு

    புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நாட்டில் நேற்றைய கொரோனா தொற்று பாதிப்பு 4,129 -ஆக இருந்த நிலையில், இன்று 3,230 ஆக பதிவாகியுள்ளது.

    இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (செப்டம்பர் 27) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 3,230 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது கடந்த 118 நாட்களில் இல்லாத அளவுக்கு மிகக்குறைவாக பதிவான தினசரி தொற்றாகும் .

    இதனால், இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ,45 ,75 ,473 ஆக அதிகரித்துள்ளது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 42,358பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்தியாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 32 பேர் உயிரிழந்தனர். இதனால், இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ,28,562 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 ,40 ,4 ,553 பேர் குணமடைந்துள்ளனர்.

    அதேவேளை, நாடு முழுவதும் இதுவரை 2,17,82,43,967 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....