புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் நேற்றைய கொரோனா தொற்று பாதிப்பு 4,129 -ஆக இருந்த நிலையில், இன்று 3,230 ஆக பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (செப்டம்பர் 27) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 3,230 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது கடந்த 118 நாட்களில் இல்லாத அளவுக்கு மிகக்குறைவாக பதிவான தினசரி தொற்றாகும் .
இதனால், இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ,45 ,75 ,473 ஆக அதிகரித்துள்ளது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 42,358பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 32 பேர் உயிரிழந்தனர். இதனால், இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ,28,562 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 ,40 ,4 ,553 பேர் குணமடைந்துள்ளனர்.
அதேவேளை, நாடு முழுவதும் இதுவரை 2,17,82,43,967 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு