Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்மூன்று மணிநேர கிடுப்பிடி விசாரணை: இறுதி கட்டத்தை எட்டியுள்ள நடிகையின் தற்கொலை வழக்கு

    மூன்று மணிநேர கிடுப்பிடி விசாரணை: இறுதி கட்டத்தை எட்டியுள்ள நடிகையின் தற்கொலை வழக்கு

    நடிகை பவுலின் ஜெசிகா தற்கொலையில், அவரின் காதலனான சிராஜுதீனிடம் நேற்று மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை பவுலின் ஜெசிகா என்ற தீபா  இவருக்கு வயது 29. இவர் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு அவென்யூ பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். நடிகை ஜெசிகா பல திரைப்படங்களில் துணை நடிகையாகவும், வாய்தா திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்து பிரபலமானவர்.

    இந்நிலையில், பவுலின் ஜெசிகா கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர், எழுதியிருந்த கடிதத்தில் அவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரின் மரணத்திற்கு யாரும் காரணமில்லை எனவும் தெரிவித்திருந்ததாக கோயம்பேடு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

    மேலும், பவுலின் குடியிருந்த பகுதியிலும் சிசிடிவி காட்சிகளை சேகரித்து சோதனை நடத்தி வந்தனர். பவுலின் ஜெசிகாவின் காதலன் என்று கூறப்படும் தயாரிப்பாளர் சிராஜுதீன் மற்றும் அவரது நண்பர் பிரபாகரன் ஆகியோர் மீது சந்தேகத்தின் பெயரில் காவல்துறையினர் விசாரணை நடத்த முடிவெடுத்தனர். ஆனால் சிராஜுதீன் தனது படப்பிப்பு வேலையாக காரைக்குடியில் இருந்தார். அதன் காரணமாக, சிராஜுதீன் காவல்துறையின் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். 

    இதையும் படிங்க: ‘ஐஸ் வாரியம்’ என்று பார்த்திபன் யாரை வர்ணித்தார்?

     இந்நிலையில், சிராஜுதீன் நேற்று கோயம்பேடு காவல்நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் காவல்துறையினர் சுமார் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். 

    விசாரணைக்கு பிறகு காவல்துறையினர் தெரிவித்துள்ளதாவது:

    நான், நடிகை பவுலின் ஜெசிகாவை காதலிக்கவில்லை. அவர்தான் என்னை காதலித்து வந்தார். அவருக்கு நான் ஒரு நல்ல நண்பனாக இருந்து வந்தேன். அவருக்கு தோல் சம்பந்தமான பிரச்சனை இருந்ததால் வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றேன். அது சம்பந்தமாக என்னிடம் அடிக்கடி பேசி வந்தார். 

    நான் வாங்கி கொடுத்த செல்போனை எடுத்து வரும்படி எனது நண்பரிடம் நான் சொல்லவில்லை. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கடைசியாக என்னிடம்தான் பவுலின் ஜெசிகா பேசினார். ஆனால், அவர் தற்கொலை செய்து கொள்வார் என நான் நினைக்கவில்லை. 

    இவ்வாறு சிராஜுதீன் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    மேலும், நடிகை பவுலினுக்கு தோல் சம்பந்தமான பிரச்சனைகள் இருந்ததா? என்பது குறித்தும் காவல்துறையினர் மருத்துவர்களிடம் விசாரணை நடத்த  உள்ளனர். 

    நடிகை பவுலினின் செல்போன் தடயவியல் சோதனைக்கு அனுப்பட்டுள்ள நிலையில், அதன் முடிவுகள் வந்த பிறகு, இந்த விசாரணை முடிவுக்கு கொண்டுவரப்பப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....