பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது. பொன்னியின் செல்வன் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினர் தீவிரமாக களத்தில் இறங்கி உள்ளனர்.
அதுமட்டுமின்றி திரைப்படத்தின் முன்னணி நடிகர் நடிகைகளான விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் தொடர்பான தங்களது புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பார்த்திபன், நடிகை ஐஸ்வர்யாராயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படைகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததோடு அதனுடன் சில குறிப்புகளை சேர்த்துள்ளார்.
நடிகர் பார்த்திபனின் ட்விட்டர் பதிவில்,
ஐஸ் வாரியம்..!
கற்றுக் கொள்ள.. காற்று கொள்ளும் மூங்கில் துளைகளில் இருந்து இசை வரும் என கோடியாய் கொட்டிக் கிடக்கின்றது இப்பூமியில். அப்படி இப்பெண்ணிடமிருந்து.. தாயானப் பிறகும், தான் விரும்பும் கலையை தொடர, ஆரோக்கியத்தை+அழகை காத்திட கடும் முயற்சியும், விடா பயிற்சியும் செய்கிறார்.
அழகென நான் காண்பது.. பிறைநிலவு வானில் இருந்து மறையுமுன்னே.. முழுநிலவாய் படப்பிடிப்பு தளத்தில் நுழைபவர் வசனங்களை(இடை வரும் புன்னகை உட்பட) மனப்பாடம் செய்து, one more கேட்கா egoவுடன் தயாராகிவிட்டு, பின் அனைவரிடமும் (selfie) அன்பொழுக பழகுகிறார்.
இவ்வாறு, அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, இந்தப்பதிவை வைத்து பல மீம்கள் வந்த வண்ணம் உள்ளன.
ஐஸ் வாரியம் !
கற்றுக் கொள்ள….
காற்று கொள்ளும் மூங்கில் துளைகளில் இருந்து இசை வரும் என கோடியாய் கொட்டிக் கிடக்கின்றது இப்பூமியில்.அப்படி
இப்பெண்ணிடமிருந்து…
தாயானப் பிறகும்,தான் விரும்பும் கலையை தொடர,ஆரோக்கியத்தை+அழகை காத்திட கடும் முயற்சியும்,விடா பயிற்சியும் செய்கிறார்conti pic.twitter.com/QNegeqscST— Radhakrishnan Parthiban (@rparthiepan) September 26, 2022
இதையும் படிங்க : ஹீரோயினாக அறிமுகமாகும் ரோஜாவின் மகள்! அதுவும் முதல் படத்திலேயே சூப்பர் ஹீரோ மகனுக்கு ஜோடியாக…