ஐசிசி வெளியிட்டுள்ள இருபது ஓவர் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான இருபது ஓவர் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இந்திய அணிக்கு ஐசிசியின் இருபது ஓவர் தரவரிசையில் 268 புள்ளிகள் கிடைத்துள்ளன. இதன்மூலம், தற்போது இந்திய அணி ஐசிசியின் இருபது ஓவர் தரவரிசையில் முதலிடத்தை பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து 261 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், தென்னாப்பிரிக்கா 258 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான் மற்றும் நீயுஸிலாந்து அணிகள் தரவரிசையில் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.
தற்போது, இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியுடனான இருபது ஓவர் தொடரில் விளையாட ஆயத்தமாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ‘பொய் சொல்ல வேண்டியதில்லை’ – தீப்தி சர்மா பேச்சு குறித்து இங்கிலாந்து கேப்டன் பதில்!