Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'அவசர சட்டத்தை  அரசு கொண்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது' - சூதாட்டம் குறித்து ராமதாஸ்!

    ‘அவசர சட்டத்தை  அரசு கொண்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது’ – சூதாட்டம் குறித்து ராமதாஸ்!

    ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு விரைவாக ஆளுனரின் ஒப்புதலை பெற வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டிருப்பதாகவும்,  ஆளுனரின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் பிரகடனம் செய்யப்படும் என்றும் தமிழக அரசு  அறிவித்திருக்கிறது. 

    இந்நிலையில் இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருப்பதாவது :

    தமிழக அரசின் அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. அண்மைக்காலங்களில் ஆன்லைன் சூதாட்டம் தான் தமிழகத்தின் மிகப்பெரிய சாபக்கேடாக மாறியிருக்கிறது. 2016-ம் ஆண்டில் தொடங்கி இதுவரை 80-க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்; பல குடும்பங்கள் வீதிக்கு வந்துள்ளன!

    ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று 2016-ம் ஆண்டு முதல் வலியுறுத்தி வருகிறேன். முந்தைய ஆட்சியில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டு வரப்பட்டு செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் புதிய அவசர சட்டத்தை  அரசு கொண்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது!

    ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு விரைவாக ஆளுனரின் ஒப்புதலை பெற வேண்டும். அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில்  சட்ட மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று  முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க : விமானத்தில் டெல்லி அழைத்து வந்து தூய்மை பணியாளருக்கு மதிய விருந்தளித்த அரவிந்த் கெஜ்ரிவால்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....