Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ராமஜெயம் வழக்கில் திடீர் திருப்பம்; தொடர்புடையவர்களிடம் தீவிர விசாரணை

    ராமஜெயம் வழக்கில் திடீர் திருப்பம்; தொடர்புடையவர்களிடம் தீவிர விசாரணை

    திருச்சி, தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கில் நீண்ட நாட்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது சிறப்பு புலனாய்வு குழு சந்தேகத்தின் பேரில் இருவரை விசாரித்து வருகிறது.

    தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம். தொழிலதிபரான இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 29 தேதி நடைபயிற்சி சென்றபோது, கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரின் உடல் திருச்சி-கல்லணை சாலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

    தமிழகத்தையே மிகவும் பரபரப்பாக்கிய இந்த கொலை சம்பவம் குறித்து முதலில் திருச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதன்பிறகு, வேறு சில விசாரணைப் பிரிவுகளுக்கும் வழக்கு மாற்றப்பட்டு விசாரணை தீவிரமாக நடந்த போதிலும் குற்றவாளிகள் குறித்த எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.

    இதையும் படிங்க : விமானத்தில் டெல்லி அழைத்து வந்து தூய்மை பணியாளருக்கு மதிய விருந்தளித்த அரவிந்த் கெஜ்ரிவால்!

    ராமஜெயத்தின் சகோதரரான ரவிச்சந்திரன், இந்த வழக்கை தமிழக காவல்துறையினரே விசாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பிறகு, கடந்த பிப்ரவரி மாதம் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.பாரதிதாசன், காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க உத்தரவிட்டார்.

    புலனாய்வுக் குழுவினர் நீதிமன்றத்தில் தங்கள் விசாரணை அறிக்கையை இரண்டு முறை தாக்கல் செய்தனர். தொடர்ந்து அவர்கள், மேலும் இந்த வழக்கில் கால அவகாசம் வேண்டும் என கோரியிருந்தனர். 

    புலனாய்வு குழுவுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இரண்டு பேரிடம் இறுதிக்கட்ட விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல்லைச் சேர்ந்த கணேசன், புதுக்கோட்டையைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகிய இருவரிடமும் புலனாய்வு குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இவர்கள் சென்னையைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பாலன் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதால், ராமஜெயம் கொலை வழக்கிலும் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....