இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டங்கள், தர்ணா, ஆர்ப்பாட்டம் மற்றும் மத நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கையினை மாநிலங்களவை செயலாளர் பி.சி.மோடி மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் நேற்று வெளியிட்டனர். மேலும், இந்திய நாடாளுமன்ற வளாகத்துக்குள் மத நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பும் இதுபோன்ற சுற்றறிக்கை வெளியிடப்படும். இந்திய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது.
முன்னதாக, ஜூலை 14-ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் என்று புதிய பட்டியலை வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கு: ரவிச்சந்திரனுக்கு மேலும் 30 நாள்கள் பரோல்