Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்பிரெய்லி எழுத்துக்களுடன் புதிய பெயர் பலகைகள்: தலைமைச்செயலகத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றம்.

    பிரெய்லி எழுத்துக்களுடன் புதிய பெயர் பலகைகள்: தலைமைச்செயலகத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றம்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் எளிய முறையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் அறைகளுக்கு செல்ல ஏதுவான பெயர் பலகை ப்ரெய்லி எழுத்துக்களுடன் புதிதாக வைக்கப்பட்டுள்ளது.

    சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்திப்பதற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதில் அவ்வப்போது பல்வேறு வகையான மாற்றுத்திறனாளிகளும் வந்து செல்லும் சூழ்நிலையில், பார்வை மாற்றுத்திறனாளிகள் எளிய முறையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் அறைகளுக்கு செல்லும் வகையில், பிரெய்லி எழுத்துக்கள் கொண்ட புதிய வண்ணப் பலகைகளும், ப்ரெய்லி நடைபாதைகளும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன.

    அமைச்சர்கள், அதிகாரிகள் அறை மட்டும் அல்லாது கழிவறை படிக்கட்டுகள் சாய்தள படிக்கட்டுகள் உள்ளிட்ட இடங்களிலும் அது குறித்த பலகை ஆனது வைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் தலைமைச் செயலகத்திற்கு வரக்கூடிய பொதுமக்களும் எளிதில் கண்டுபிடிக்க கூடிய வகையில் அமைச்சர்களின் உடைய அறையின் வெளியே நீல நிறப் பலகையும், அவசர வழிக்கான பாதையில் பச்சை வண்ண பலகையும், தீயணைப்பு கருவிகள் உள்ள இடங்களில் சிவப்பு நிற பலகையும் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த அனைத்து வண்ண பலகையிலும் ப்ரெய்லி எழுத்துக்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: தலைமைத்திறன் பயிற்சி முகாம்: புதுச்சேரி கூட்டுறவுத்துறை ஏற்பாடு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....