Saturday, March 16, 2024
மேலும்
    Homeஜோதிடம்நவராத்திரி தொடங்கியாச்சு! இனி இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தான்!

    நவராத்திரி தொடங்கியாச்சு! இனி இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தான்!

    நவராத்திரி கொண்டாட்டம் இன்று முதல் தொடங்குகிறது. நவராத்திரி தினங்கள் 9 நாட்கள் கடைபிடிக்கப்படும். இந்த ஒன்பது நாட்களில் துர்கை தேவியின் ஒன்பது அவதாரங்களகளை நினைத்து, பூஜித்து வழிபாடு செய்யப்படுவது வழக்கம். 

    நவராத்திரியின் முதல் நாளில் கலசம் அமைக்கப்படுகிறது. துர்கை அம்மனை வழிபாடு செய்வதின் மூலம் தீவினைகள் விலகி நன்மைகள் கிடைக்கும். 

    அதே நேரத்தில், நவராத்திரி தொடங்கியவுடன் சில ராசிக்காரர்களுக்கு எல்லா வளமும் வந்து சேரும். இந்த ராசிக்காரர்களுக்கு அன்ன லட்சுமியின் அருள் கிடைக்கும். இந்த ராசிக்காரர்கள் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள். அப்படி இந்த ஆண்டு நவராத்திரியில் ஜொலிக்கப் போகும் ராசிகளைப் பற்றி இப்போது காணலாம். 

    மேஷம்:

    இந்த நவராத்திரியில் மேஷ ராசிக்காரர்களுக்கு வேலை, வியாபாரத்தில் சிறப்பான பலன்களைப் பெற வாய்ப்புகள் அதிகம். திருமண பந்தத்தில் மகிழ்ச்சியாக இருக்க நேரிடும். பண வரவு அதிகரிக்க கூடும். பணியிடத்தில் உங்களுக்கான அதிகாரமும் பாராட்டும் கிடைக்கும். லட்சுமியின் அருளால் ஆன்மிகப் பணிகளில் உங்களுக்கு நாட்டம் அதிகரிக்கும்.

    மிதுனம்:

    இந்த நவராத்திரி முதல் வாழ்வில் முன்னேற்றத்திற்கான அதிக வாய்ப்புகள் உண்டாகும். புதிய வீடு, வாகனம் வாங்க நல்ல வாய்ப்பு அமையும். துர்கை அம்மனின் அருளும் ஆசியும் இந்த ராசிக்காரர்களுக்கு அதிகம் இருக்கும். உங்களின் கடின உழைப்பு அனைத்து விதமான ஆசைகளையும் நிறைவேற்ற உதவ வழிவகுக்கும்.

    கன்னி:

    கன்னி ராசிக்காரர்களுக்கு துர்கை அம்மனின் அருள் நிறைவாகக் கிடைக்கும். குடும்பத்தின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். உங்கள் வேலையில் வெற்றிகள் கிடைக்கும். திருமண காரியங்கள் கைக்கூடி நிச்சயமாகும். சிறப்பான மகிழ்ச்சியான சூழல் நிலவும். 

    விருச்சிகம்:

    விருச்சிக ராசிக்காரர்களின் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளன. பழைய முதலீடுகளில் இப்போது லாபம் அதிகரிக்கும். அதிகாரிகளின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்ப உறவுகள் பலப்படும். துர்கையின் ஆசியும் அருளும் நிறைவாகக் கிடைக்கும். 

    மீனம்:

    இந்த நவராத்திரியில் மீன ராசிக்காரர்களுக்கு அதிகமான நன்மைகள் நடைபெறும். வருமான ரீதியாக நல்ல வரவு இருக்கும். உங்கள் துறைச் சார்ந்த பணிகளில் மிகுந்த ஈடுபாடு இருக்கும். அதனால், நீங்கள் ஆதாயம் காண்பீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். துர்கையின் அருள் காரணமாக புதிய வேலைகள் உங்களுக்கு கைக்கொடுக்கும். 

    இதையும் படிங்க : பிரதோஷ நாட்களில் கேட்கவேண்டிய சிவபுராண பாடல்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....