Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாநவராத்திரி பண்டிகை கொண்டாட்டம்; பிரதமர் மோடி வாழ்த்து!

    நவராத்திரி பண்டிகை கொண்டாட்டம்; பிரதமர் மோடி வாழ்த்து!

    நவராத்திரி பண்டிகை கொண்டாட்டம் நேற்று தொடங்கிய நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து அவர், வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் தெரிவித்துள்ளதாவது:

    காளையின் மீது ஏறி திரிசூலத்தை ஏந்தியபடி, மலைகளின் புகழ்பெற்ற மகள் ஷைலபுத்ரி தேவி வழிபாட்டுடன் நவராத்திரி தொடங்குகிறது. அவர் அருளால், அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் மற்றும் ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்க வேண்டுகிறேன்.

    அன்னையின் இரண்டாம் வடிவமான பிரம்மச்சாரிணி அன்னையின் சிறப்பு வழிபாடு இன்று. அவர் தனது பக்தர்கள் அனைவருக்கும் வலிமை, சக்தி மற்றும் வெற்றியை ஆசீர்வதிக்க விரும்புகிறேன். அவர் அருளால் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க : நவராத்திரி தொடங்கியாச்சு! இனி இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தான்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....