நாகூர் நாகநாதர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
நாகை மாவட்டம், நாகூர் நாகநாதர் கோயிலில் ஆனிமாத பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. தினந்தோறும் சுவாமிக்கும் அம்பாளுக்கும் பல்வேறு வகையான அபிஷேகம், அலங்கார தீபாராதனை, வீதி உலா போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தது.
இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி, நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் 12-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வருகிற 30-ம் தேதி (சனிக்கிழமை) அன்று பள்ளிகள் செயல்படும்.
இவ்வாறாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் முன்னாள் எம்.எல்.ஏ தடகளப் போட்டியில் வெண்கலப் பதக்கம்