Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகாதலியை 35 துண்டுகளாக வெட்டிய காதலன்.! 18 நாட்கள் பதப்படுத்தி தில்லி முழுவதும் வீசிய கொடூரம்

    காதலியை 35 துண்டுகளாக வெட்டிய காதலன்.! 18 நாட்கள் பதப்படுத்தி தில்லி முழுவதும் வீசிய கொடூரம்

    காதலி திருமணத்திற்கு வற்புறுத்தியதால் அவரை கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி உடல் பாகங்களை வெவேறு பகுதிகளில் வீசிய கொலையாளி காதலன் கைது செய்யப்பட்டார்.

    மும்பையைச் சேர்ந்த ஷ்ரத்தா என்ற பெண் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அப்போது அங்கு அப்தப் அமீன் பூனாவாலா என்ற நபரை சந்தித்தும், சிறிது காலத்தில் இருவரிடையே காதல் மலர்ந்துள்ளது. 

    காதலை தனது தந்தையிடம் ஷ்ரத்தா கூற, அவர் காதலை ஏற்க மறுத்துள்ளார். இதனால் ஷ்ரத்தா வீட்டை விட்டு வெளியேறி, காதலன் அப்தப் அமீன் பூனாவாலாவுடன் தில்லி சென்று லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்தார். 

    ஆறு மாதம் காலமாக தனது மகள் எப்படி இருக்கிறாள் என்பதை ஷ்ரத்தாவின் தந்தை முகநூல் செயலி வழியே பார்த்து வந்துள்ளார். 

    இந்நிலையில் சில நாட்களாக தனது மகள் முக நூல் பக்கமே வராததை அறிந்த தந்தை, உடனே தில்லிக்கு சென்று தனது மகள் தங்கியிருந்த குடியிருப்பில் விசாரித்த பொழுது, அங்கு யாரும் இல்லை என தெரியவந்தது. இதனால் அங்குள்ள காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். 

    இதையடுத்து ஷ்ரத்தாவுடன் இருந்த அப்தப் அமீன் பூனாவாலாவை விசாரித்த பொழுது, பல அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன. 

    ஷ்ரத்தா தன்னை திருமணம் செய்துகொள்ள சொல்லி வற்புறுத்தியதாகவும் அதனால், அவரை கடந்த மே மாதம் 18 ஆம் தேதி கொலை செய்ததாகவும், பிறகு ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி அதை குளிர் பதனப் பெட்டியில் அமீன் வைத்ததும் தெரியவந்தது. 

    பிறகு உடல் பாகங்களை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து தில்லியின் வனப்பகுதிகளில் 18 நாட்கள் தொடர்ந்து வீசியதாகவும் அமீன் வாக்குமூலம் அளித்தது காவல்துறை இடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    வாக்குமூலத்தின் அடிப்படையில் அமீன் கைது செய்யப்பட்டார். மேலும் அதன் அடிப்படையில் ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

    இதையும் படிங்கமழை வெள்ளத்தால் ஏற்படும் உயிர் சேதங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....